சனி, 17 மார்ச், 2012
நீலிகண்ணீர் ..!
"ரயில் கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டேன் " என்கிறார் மம்தா. இது ஒண்ணும் மிகப்பெரிய கட்டண உயர்வல்ல. சென்னைக்கு இரண்டாம் வகுப்பு கட்டணம் ரூ. 25 /-தான் அதிகமாகிறது . இங்கே பேருந்து கட்டணம் இரண்டு மடங்கு மூன்று மடங்கு அதிகமாக்கி இருக்காங்க அம்மா . யாரும் வாயைத்தொறக்கவில்லை! ஆனால் மம்தாவோ "கட்டண உயர்வை அனுமதிக்க மாட்டேன் .." என்று பொங்கி எழுகிறார். பத்து வருடங்களுக்கு பிறகு உயர்ந்துள்ள இந்த சின்ன கட்டண உயர்வை நம் முதல்வர் ஜெ. " சாதாரண மக்களுக்கு கடுமையான பாதிப்பு ,சுமை .." என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறார். மூன்று மடங்கு பேருந்து கட்டண உயர்வு மட்டும் மக்களை பாதிக்காதா ..? இது கடுமையான சுமை இல்லையா ..?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக