வெள்ளி, 6 ஏப்ரல், 2012

எங்கள் வீடு

பக்கத்துக்கு வீடுகளை விட உயரமாய்
மேல் தளத்தில்
ஆஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த கம்பீரத்துடன்
மழை காலங்களில்
பின்புறம் சேறும் சகதியும் கொண்ட
செந்நீர் ஓடும் வாய்க்காலுமாய்
கரையைத் தொட்டுக்கொண்டு
வேப்பமரமும், கொடுக்காயப்புளி
முருங்கயுமாய்
முக்கிய சாலைக்கு அருகிலேயே
முன்புறம் விசாலமான
காலியிடமும்
நாலு நண்பர்களுடன்
சாவகாசமாய் அமர்ந்து
இலக்கியம் பேச திண்ணையுமாய்
சௌகரியமாய்தான் இருக்கிறது
குடித்தால் மட்டுமே வந்து
ரகளை செய்யும்
வீட்டுக்காரனின்
சொந்த வீடு.

எங்கள் வீடு

பக்கத்துக்கு வீடுகளை விட உயரமாய்
மேல் தளத்தில்
ஆஸ்பெஸ்டாஸ் ஓடு வேய்ந்த கம்பீரத்துடன்
மழை காலங்களில்
பின்புறம் சேறும் சகதியும் கொண்ட
செந்நீர் ஓடும் வாய்க்காலுமாய்
கரையைத் தொட்டுக்கொண்டு
வேப்பமரமும், கொடுக்காயப்புளி
முருங்கயுமாய்
முக்கிய சாலைக்கு அருகிலேயே
முன்புறம் விசாலமான
காலியிடமும்
நாலு நண்பர்களுடன்
சாவகாசமாய் அமர்ந்து
இலக்கியம் பேச திண்ணையுமாய்
சௌகரியமாய்தான் இருக்கிறது
குடித்தால் மட்டுமே வந்து
ரகளை செய்யும்
வீட்டுக்காரனின்
சொந்த வீடு.

கவிதை

கண்களை மூடி

தொழுகையில்

நிற்கும் போதெல்லாம்

பூதாகாரமாய்

எதிரே நிற்கிறது

சைத்தான் !

********

2.

ஆறறிவுள்ள மனிதன் நான்

என்னால் எதையும்

செய்ய முடியும்

இறுமாந்திருந்த நேரத்தில்

சட்டென

நதி கடந்து

மலை மீது பறக்கிறது

ஒரு வண்ணத்துப் பூச்சி....